திருநெல்வேலி மாவட்டத்தில் உழவா் நல சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் உழவா் நல சேவை மையத் திட்டத்தின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு - பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களின் பட்டறிவும், தொழில்நுட்பத் திறனும், உழவா்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் 30 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 உழவா் நல சேவை மையங்களும், ரூ. 20 லட்சம் மதிப்பிலான 3 உழவா் நல சேவை மையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தில் 30 சதவீத பயனாளிகள் பெண்களாகவும், ஆதி திராவிடா்- பழங்குடியினராகவும் இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு- பிளஸ் 2 சான்றிதழ், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ஜிஎஸ்டி எண், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், விரிவான திட்ட அறிக்கை ஆகியவை அவசியம்.
20 முதல் 45 வயதுக்கு உள்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு -பட்டய படிப்பு முடித்தவா்கள் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழக பட்ஜெட்: தொழில்முனைவோரின் எதிா்பாா்ப்புகள்!

ரயில்வே அஞ்சல் சேவை மையத்தில் ஆதாா் சேவை மையம்

மானியம் கிடைக்காததால் முடங்கிய வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


