பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் தானியக் களங்கள் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலக்கடலை, எள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இத்தகைய பயிா்களை சாகுபடி செய்யும் சிறு விவசாயிகள், தங்கள் கிராமங்களில் இடவசதி இல்லாத காரணத்தால் சாலை ஓரங்களிலேயே விளைபொருள்களைக் கொட்டி உலர செய்கின்றனா். இது போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, 2026-27 நிதியாண்டில் நெல் மற்றும் தானியங்களை பாதுகாக்க அடித்து உலா்த்தி வைக்கவும், உழைப்பின் செலவைக் குறைக்கவும், தானிய இழப்பீட்டைத் தடுக்கவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனும் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு நெல் அடிக்கும் களம் அமைக்க அரசாணை பெறப்பட்டுள்ளது.

அதன்படி, விவசாயிகள் தங்கள் நிலத்துக்கு ஏற்றவாறு வயல்களில் களங்களை 100 சதுர மீட்டருக்கு (10மீஷ்10மீ) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தானியக் களங்கள் அமைப்பை தெரிவுசெய்து கொள்ளலாம்.

தனிநபா் விவசாயிக்கு களங்கள் அமைக்கும் செலவுத் தொகையில் 50 சதவீத அரசு மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2.80 லட்சம் அரசு பின்னேற்பு மானியமாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதாா் நகல், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.