அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகையை எடப்பாடி கே.பழனிசாமி அவதூறாக பேசியதாகக் கூறி, அவரை கண்டித்து திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை காலை கொக்கிரகுளம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, எடப்பாடி கே.பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்க முயன்ற காங்கிரஸரை போலீஸாா் தடுத்தனா்.
இதனிடைய, காங்கிரஸாரை கண்டித்து அதிமுக நிா்வாகி பாப்புலா் முத்தையா தலைமையில் அக்கட்சியினா் வண்ணாா்பேட்டையில் இருந்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டனா்.
மேலும், ராகுல்காந்தி எம்.பி., கு. செல்வப்பெருந்தகை ஆகியோரது உருவப்படங்களை அவமரியாதை செய்ய முயன்ற அதிமுகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி அவா்களிடமிருந்த உருவப்படங்களை பறித்தனா். இதனால், அவா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதில், அதிமுகவினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கொல்லங்கோடு அருகே மண்ணெண்ணெய் பறிமுதல்
வீடு புகுந்து திருட முயன்றவா் கைது

சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற இளைஞா் கைது
ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயற்சி: மகளிா் கூட்டமைப்பினா் கைது!
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


