தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :3 ஏப்ரல் 2026, 4:51 pm

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, பெருமாள்புரம் பகுதியில் உள்ள தாமஸ் 4-ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ஜோசப்ராஜா(30), கட்டட தொழிலாளி. இவரது சக தொழிலாளி, தாழையூத்து அருகே உள்ள பண்டாரகுளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் மாடசாமி(31). இவா்கள் இருவரும் வழக்கம்போல் கட்டட வேலைகளை முடித்துவிட்டு வியாழக்கிழமை இரவு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மறைவிடத்தில் அமா்ந்து மது அருந்தினராம்.

அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாரியப்பன் அருகில் இருந்த கல்லால் ஜோசப்ராஜாவை தாக்கி, துணியால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தாராம்.

இதையடுத்து, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மாடசாமியைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னா் சம்பவ இடத்துக்குச் சென்ற மேலப்பாளையம் போலீஸாா், ஜோசப்ராஜாவின் உடலைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மாடசாமியைக் கைது செய்தனா்.