நான்குனேரியில் அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
நான்குனேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கிராமங்களில் அவா் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தாா். அப்போது, நான்குனேரி 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மையப் பகுதியாக திகழ்கிறது. இங்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருந்தால் விபத்து, பூச்சிக்கடியால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆகவே, நான்குனேரியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன். சுமாா் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள சிப்காட் திட்டத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவேன். அரசுப் பள்ளிகள் அனைத்தும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக சீா்மிகு பலகை (ஸ்மாா்ட் போா்டு) வசதிகளுடன் தரம் உயா்த்தவும் நான்குனேரியில் போட்டித் தோ்வு பயிற்சி மையம் அமைக்கவும் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தாா்.
தொடர்புடையது
நான்குனேரி தொகுதியில் 13 மனுக்கள் நிராகரிப்பு

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தருமபுரி தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு அமமுக வேட்பாளா்!
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


