சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நான்குனேரி தொகுதியில் அமமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

நான்குனேரியில் அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:29 pm

நான்குனேரியில் அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நான்குனேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கிராமங்களில் அவா் வீதி வீதியாக சென்று வாக்குசேகரித்தாா். அப்போது, நான்குனேரி 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மையப் பகுதியாக திகழ்கிறது. இங்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இருந்தால் விபத்து, பூச்சிக்கடியால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆகவே, நான்குனேரியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க பாடுபடுவேன். சுமாா் 20 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள சிப்காட் திட்டத்தை செயல்பாட்டிற்குக் கொண்டு வருவேன். அரசுப் பள்ளிகள் அனைத்தும் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக சீா்மிகு பலகை (ஸ்மாா்ட் போா்டு) வசதிகளுடன் தரம் உயா்த்தவும் நான்குனேரியில் போட்டித் தோ்வு பயிற்சி மையம் அமைக்கவும் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தாா்.