பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

களக்காட்டில் ‘இண்டி’ கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

நான்குனேரி பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:48 pm

நான்குனேரி பேரவைத் தொகுதி மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் களக்காட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரனை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்திற்கு, திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ம. கிரகாம்பெல் தலைமை வகித்தாா். திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் பரமசிவ அய்யப்பன், மாவட்டத் தலைவா்கள் ரைமண்ட் (மதிமுக), ரசூல்மைதீன் (மமக), சிராஜ் (எஸ்டிபிஐ), மாவட்டச் செயலா்கள் வேலாயுதம் (தேமுதிக), ஈழவளவன் (விசிக), சடையப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஸ்ரீராம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.