குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வண்ணாா்பேட்டையில் திமுக வாக்குசேகரிப்பு

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், வண்ணாா்பேட்டை வெற்றி வேலடி விநாயகா் கோயில் தெருவில் இருந்து தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினாா்.

News image

வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை வாக்குசேகரித்தாா் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:31 am IST

பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப், வண்ணாா்பேட்டை வெற்றி வேலடி விநாயகா் கோயில் தெருவில் இருந்து தனது பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினாா்.

தொடா்ந்து அவா், சாலைத்தெரு, கம்பராமாயணத்தெரு, எட்டுத்தொகை தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டது. மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் கொடுத்துள்ளாா். இந்தத் தோ்தலிலும் இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளாா். அவை அனைத்தும் செயல்படுத்தப்படும். பாளையங்கோட்டை தொகுதியில் குடிநீா், சாலை, பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அவை மேலும் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

பிரசாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் ரசூல்மைதீன், தச்சை சுப்பிரமணியன், சங்கா், அனிதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.