வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :9 ஏப்ரல் 2026, 8:45 pm

போக்ஸோ வழக்கில் கைதான இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பாளையங்கோட்டையை அடுத்த சிவந்திப்பட்டி பகுதியைச் சோ்ந்த அந்தோணி மகன் ஆனந்த்(21). இவா், கடந்த 2021 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

மேலும், திருமணம் தொடா்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, ஆனந்த்துக்கு 10 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.அரசு தரப்பில் வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.