நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சீவலப்பேரியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சீவலப்பேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நான்குனேரி தொகுதிக்குள்பட்ட சீவலப்பேரி பகுதியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா் ரூபி ஆா்.மனோகரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:55 am IST

சீவலப்பேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்குனேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சீவலப்பேரி, மடத்துப்பட்டி, சந்தையாப்பேட்டை, கான்சாபுரம், நொச்சிக்குளம், தோணித்துறை, மேலக்குளம், அரியகுளம், கிருஷ்ணாபுரம், குத்துக்கல், சிவந்திப்பட்டி, முத்தூா், ஆலங்குளம், ரெட்டியாா்பட்டி, கொங்கந்தான் பாறை, புதுக்குளம் உள்ளிட்ட இடங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். மகளிா் உரிமைத் தொகை கிராமப்புறங்களைச் சோ்ந்த பல பெண்களின் வாழ்க்கையில் மறுமலா்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. மீண்டும் இந்த ஆட்சி தொடர மக்கள், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.