மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராமையன்பட்டியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 8:24 pm

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு, மானூா் மற்றும் ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திருநெல்வேலி தொகுதியில் பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனக்கு வாய்ப்பளித்தால் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பதோடு, திருநெல்வேலி நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். அதைத் தடுத்து குப்பைகளை நவீன முறையில் கையாள செயல்திட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.