இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ராமையன்பட்டியில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 1:54 am IST

ராமையன்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

திருநெல்வேலி சந்திப்பு, மானூா் மற்றும் ராமையன்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திருநெல்வேலி தொகுதியில் பல்வேறு அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எனக்கு வாய்ப்பளித்தால் தரமான சாலைகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பதோடு, திருநெல்வேலி நகரின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும் தொகுதிக்குள்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ பற்றி எரிவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா். அதைத் தடுத்து குப்பைகளை நவீன முறையில் கையாள செயல்திட்டம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.