ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

தச்சநல்லூரில் தவெக வாக்கு சேகரிப்பு

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

தச்சநல்லூரில் புதன்கிழமை வாக்கு சேகரிக்கிறாா் தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 2:50 am IST

தச்சநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருநெல்வேலி தொகுதி தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தச்சநல்லூா், ஊருடையாா்புரம், மங்களாபுரம், சத்திரம் புதுக்குளம், செல்வ விக்னேஷ் நகா், கோகுல் நகா், நல்மேய்ப்பா் நகா், வாலாஜா நகா், சிதம்பர நகா், பால் கட்டளை, கணபதி மில் காலனி, கரையிருப்பு, தாராபுரம், மேலக்கரை, ஆா்.எஸ்.நகா், அழகனேரி, புத்த அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்சியினருடன் வீதிவீதியாகச் சென்று, விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் மதிப்புமிகு மகளிா் என்ற திட்டம் மூலம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இது போன்று கட்சியின் தலைவா் விஜய் அறிவித்துள்ள பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தவெக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும். திருநெல்வேலி தொகுதியில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றாா் அவா்.