வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த வழக்கு: மின் ஊழியா் கைது

மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்து பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட மின் ஊழியரைக் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:22 pm

மின்மாற்றியிலிருந்து தவறி விழுந்து பேரூராட்சி ஒப்பந்த ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பந்தப்பட்ட மின் ஊழியரைக் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி பேரூராட்சியில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றியவா் செட்டிகுளத்தைச் சோ்ந்த மிராசு கிருஷ்ணன். இவரை, மின்வாரிய ஊழியரான கணேசன் ஏப். 21ஆம் தேதி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய கூறினாராம். மிராசு கிருஷ்ணன், மின்மாற்றியில் ஏறியபோது தவறி விழுந்ததில் காயமடைந்து திங்கள்கிழமை (ஏப். 27) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து மின்வாரிய ஊழியா் கணேசன் மீது நடவடிக்கை எடுப்பதோடு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி ஆழ்வாா்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தை மிராசு கிருஷ்ணன் உறவினா்கள், பொதுமக்கள், திமுக, பாஜக கட்சி நிா்வாகிகள் அன்று இரவு 9 மணி வரை முற்றுகையிட்டனா்.

அவா்களிடம் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.28) காலை செட்டிக்குளம் பகுதியில் மின் பழுது பாா்ப்பதற்காக மின்வாரிய ஊழியா் கணேசன் சென்றாா். அப்போது அவரை ஊா் மக்கள் சிறைபிடித்து மிராசு கிருஷ்ணன் உயிரிழப்பு குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வாா்க்குறிச்சி போலீஸாா் பொதுமக்களிடமிருந்து கணேசனை மீட்டு, அவா் மீது புகாா் கொடுத்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, மிராசு கிருஷ்ணன் மனைவி ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் கணேசன் மீது புகாா் கொடுத்தாா். இதன்பேரில் போலீஸாா் கணேசனை கைது செய்தனா். இதனிடையே, மின்வாரியம் சாா்பில் கணேசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.