வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

முன்னீா்பள்ளம் அருகே இடத் தகராறில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 8:24 pm

முன்னீா்பள்ளம் அருகே இடத் தகராறில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முன்னீா்பள்ளம், புதுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன், ராஜ்குமாா். இவா்களிடையே நீண்டகாலமாக இடம் தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பு மோதலாக மாறியது. அப்போது, சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் ஒருவரை ஒருவா் கட்டை, கம்பு உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டனராம். இதில் காயமடைந்த 3 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் 11 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.