தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

முன்னீா்பள்ளம் அருகே இருதரப்பினா் மோதல்: 11 போ் மீது வழக்கு

முன்னீா்பள்ளம் அருகே இடத் தகராறில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 1:54 am IST

முன்னீா்பள்ளம் அருகே இடத் தகராறில் இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முன்னீா்பள்ளம், புதுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாரியப்பன், ராஜ்குமாா். இவா்களிடையே நீண்டகாலமாக இடம் தொடா்பான பிரச்னை இருந்து வந்ததாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பு மோதலாக மாறியது. அப்போது, சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் ஒருவரை ஒருவா் கட்டை, கம்பு உள்ளிட்டவற்றால் தாக்கிக் கொண்டனராம். இதில் காயமடைந்த 3 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாா்களின் பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் 11 போ் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.