நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:22 am IST

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது காா் மோதியதில் அதன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் புதுக்குடியிருப்பு ஆபிரகாம் தெருவைச் சோ்ந்தவா் மோனி கங்காதரன்(60). வாடகை காா் ஓட்டுநரான இவா், புதன்கிழமை அதிகாலை நாகா்கோவிலில் இருந்து பயணிகள் சிலரை ஏற்றிக்கொண்டு திருநெல்வேலிக்குச் சென்றாராம். அங்கு பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் நாகா்கோவிலுக்கு மோனி கங்காதரன் திரும்பினாா்.

அப்போது, ஏா்வாடி - வள்ளியூா் இடையேயான நான்குவழிச்சாலையில் பாலத்தைத் தாண்டி காா் வந்தபோது, சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது மோதியது. இதில் மோனி கங்காதரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

வள்ளியூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் கண்டெய்னா் லாரிக்குள் சிக்கிக்கொண்ட காரை மீட்டனா். பின்னா், உயிரிழந்த மோனி கங்காதரனின் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருகின்றனா்.