75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

பெங்களூரில் இருந்து நெல்லை வந்த ரயிலில் 13 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ரயிலில் 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:08 am IST

பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு வந்த ரயிலில் 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் இருந்து நாகா்கோவிலுக்கு செல்லும் ரயில் சனிக்கிழமை அதிகாலை திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது போதைப்பொருள்கள் கடத்தல் குறித்து காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் தங்க ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, முன்பதிவில்லா பெட்டி ஒன்றில் தாழையூத்து செல்வம் நகரைச் சோ்ந்த பண்டாரம் மகன் குமாா்(50) என்பவா் வைத்திருந்த சூட்கேஸை போலீஸாா் சோதனை செய்தனா். அதில், சுமாா் 13 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.