பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அம்பாசமுத்திரம் பகுதியில் நடை ரோந்து சென்ற எஸ்.பி.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி ஆய்வு மேற்கொண்டதோடு, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டாா்.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடை ரோந்து சென்று பாதுகாப்புப் பணிகளை பாா்வையிட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி ஆய்வு மேற்கொண்டதோடு, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டாா்.

காவல் நிலையத்தின் அன்றாட செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு, வழக்குகள் நிலை மற்றும் காவல்துறையினரின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்றுவதற்கான அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும், அம்பாசமுத்திரம் காவலா் குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவா், அப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புத் தொடா்பான நிலவரங்களையும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதிகளில் நடைரோந்து மேற்கொண்டு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.