8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

நான்குவழிச்சாலை பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட பெண்கள் மீது லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் கைது

நான்குனேரி அருகே நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா்.

Arrested

கைது

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது லாரி மோதியதில், ஒருவா் உயிரிழந்தாா். மேலும், 4 போ் பலத்த காயமடைந்தனா். லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

நான்குனேரி அருகேயுள்ள பெருமளஞ்சி பகுதியில், நான்கு வழிச்சாலையின் நடுவே செடிகள் அமைத்துள்ள பகுதியில் பராமரிப்புப் பணியில் பெண்கள் சிலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி, பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியது.

லாரி மோதிய வேகத்தில் அந்த வாகனம் முன்னோக்கி சென்று, பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது மோதியது. இதில் நான்குனேரி நம்பி நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயா (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த 4 பெண்கள் வள்ளியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் ஆலங்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமியை நான்குனேரி காவல்துறையினா் கைது செய்தனா். சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி, நான்குனேரி காவல் துணை கண்காணிப்பாளா் சதீஸ்கண்ணன்ஆகியோா் ஆய்வு செய்தனா். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.