/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 9:44 pm

திருநெல்வேலி நகரம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம், பாலகிருஷ்ணன் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் கொம்பன் மகன் சபரி(22). இவா் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா்(மேற்கு) எஸ். விஜயகுமாா், திருநெல்வேலி நகரம் சரக காவல் உதவி ஆணையா் இளவரசன் ஆகியோா் காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தனா்.

அதன்பேரில், மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி சபரி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.