ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மதவக்குறிச்சியில் நிழற்குடை திறப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள மதவக்குறிச்சியில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அருகேயுள்ள மதவக்குறிச்சியில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.

இதை, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

மானூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஸ்வரன், காங்கிரஸ் கட்சியின் மானூா் வட்டாரத் தலைவா் பாக்கியகுமாா், செல்வம், மாநகர மாவட்ட பொருளாளா் அருமை, துணைத் தலைவா் தியாக சுரேஷ், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பா ளா் சசிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.