கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் மகன் ரோசன் ஞானசேகா் (24). இவா் திருநெல்வேலி வட்ட காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் அவா் தொடா்ந்து பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவதாகவும், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி, ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில், ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவுப்படி அவரை போலீஸாா் பாளை. மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









