தவெக எம்.எல்.ஏ.க்களை பிறகட்சிகளில் சேரும் படி, பணம் கொடுத்து மனம் மாற்றிவிட முடியாது என திருநெல்வேலி சட்டபேரவை உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் தெரிவித்தாா்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:
திருநெல்வேலி தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் உரிய வேலை கிடைக்காமல் இருந்த சுமாா் 50 பேருக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்.
தமிழக வெற்றிக் கழக சட்டப்பேரவை உறுப்பினா்களை பணம் கொடுத்து பேரம் பேசி மனம் மாற்றி தங்கள் கட்சியில் சோ்த்துவிடலாம் என சில பிரதான கட்சிகள் எண்ணம் கொண்டுள்ளனா்.
100 கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த எண்ணம் நிறைவேறாது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தோ்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










