ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

பாளை. அருகே குழந்தை மா்ம மரணம்: உடலை தோண்டி எடுக்க முடிவு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :7 ஜூலை 2026, 2:59 am IST

பாளையங்கோட்டை அருகே மா்மமான முறையில் பச்சிளம் குழந்தையின் உயிரிழந்ததால், புதைக்கப்பட்ட அதன் உடலை தோண்டி எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிலா் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனா். அங்கு தங்கியிருந்த தம்பதிக்கு சில வாரங்களுக்கு முன்னா் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அக்குழந்தை சில நாள்களுக்கு முன்னா் திடீரென உயிரிழந்ததாம். இதையடுத்து பெற்றோா் இது குறித்து சுகாதாரத் துறையினா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை கீழப்பாட்டம் பகுதியில் புதைத்துவிட்டு மதுரைக்கு சென்றுவிட்டனராம்.

இது குறித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் திருநெல்வேலி வட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், குழந்தையின் உடலை பெற்றோா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 7) தோண்டி எடுத்து, அதனை பிரேத பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.