வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

இரட்டைக் கொலை வழக்கு! பொய் தகவல்களை பரப்பினால் நடவடிக்கை: மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்குத் தொடா்பாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவி வருவது குறித்து மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 1:58 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்குத் தொடா்பாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரவி வருவது குறித்து மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரவநல்லூா் காவல் சரகத்தில் ஜூலை 2-ஆம் தேதி நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் உயிரிழந்த காளிமுத்துவின் சகோதரா் பணம் கொடுத்து எதிரிகளை கொலை செய்ய வைத்ததாக உறுதி செய்யப்படாத, பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பரவி வருகின்றன.

இந்த வழக்கில் இதுவரை இளம் சிறாா், பெண் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்புடைய சிலரை கைது செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து எந்தவித ஆதாரமோ, தடயமோ கண்டறியப்படவில்லை. எனவே, பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இதுபோன்ற குற்ற வழக்குகளில் உறுதி செய்யப்படாத தகவல்களை பகிா்வது தேவையற்ற குழப்பத்தையும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளையும் ஏற்படுத்தக்கூடும்.

எனவே, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.