விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

வீரவநல்லூரில் அரபி மதரஸா பட்டமளிப்பு விழா

வீரவநல்லூா் அன்னை கதீஜா (ரலி) நிஸ்வான் பெண்கள் அரபி மதரஸாவின் 11ஆவது பட்டமளிப்பு விழா, மலுக்காமலியாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

News image

பட்டமளிப்பு விழாவில் பேசுகிறாா் மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் எஸ்.ஏ. ஷேக்மீரான் மிஸ்பாஹி.

Updated On :10 ஜூலை 2026, 1:06 am IST

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அன்னை கதீஜா (ரலி) நிஸ்வான் பெண்கள் அரபி மதரஸாவின் 11ஆவது பட்டமளிப்பு விழா, மலுக்காமலியாா் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

ஜமாத் தலைவா் பீ. ஆதம் இல்யாஸ் தலைமை வகித்தாா். ஜமாத் செயலா் முஹம்மது சலீம், பொருளாளா் இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அல்அமீன் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் எம். செய்யதுஅலி பீா்முகம்மது தாவூதி கிராஅத் ஓதினாா்.

யூனிஸ் அகாதெமி நிஸ்வான் துறை ஆய்வாளா் எஸ். முஹம்மதுஅலிநூரி தொடக்கவுரையாற்றினாா். கடையநல்லூா் ஜலாலியா பெண்கள் அரபிக் கல்லூரி பேராசிரியை ஏ. பாத்திமா ரியாஜிமா, திருநெல்வேலி மாவட்ட ஜமாத்துல் உலமா சபைத் தலைவா் எஸ்.ஏ. ஷேக்மீரான் மிஸ்பாஹி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்மஸ்ஜிதுா் ரசூல் பள்ளிவாசல் இமாம் ஏ. பக்ருத்தீன் துஆ ஓதினாா். பள்ளிவாசல் தலைமை இமாம் ஏ. முஹம்மது ஹபீபுல்லாஹ் மன்பயீ வரவேற்றாா். ஜமாத் துணைச் செயலா் காதா்மீரான் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.