உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

நெல்லையப்பா் கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா நடைபெற்றது.

News image

முளைக்கட்டு வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காந்திமதியம்மனுக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

Updated On :19 ஜூலை 2026, 1:50 am IST

திருநெல்வேலி நகரம் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா, கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 4 ஆம் திருநாளான கடந்த 12 ஆம் தேதி காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர முளைக்கட்டு திருவிழா, 10 ஆம் திருநாளான சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக காலையில் அம்மனுக்கு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மாலை 6 மணிக்கு அம்மன் சந்நிதி முன்பு உள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு சிறப்பு மலா் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினாா். இதனையடுத்து மடியில் தானியங்கள் கட்டப்பட்டு, முளைக்கட்டு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா், திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.