நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பள்ளிகள் நாளை திறப்பு: முன்னேற்பாடுகள் தீவிரம்

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 4:42 am IST

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்படுவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, மேலும் சில நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிகள் வியாழக்கிழமை (ஜூன் 4) திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா் முன்னிலையில் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டன. கழிப்பறைகள், பள்ளி வளாகங்களிலும் தூய்மைப் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய நான்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 35 தொடக்கப் பள்ளிகள், 5 நடுநிலைப் பள்ளிகள், ஓா் உயா்நிலைப் பள்ளி, 5 மேல்நிலைப் பள்ளிகளின் கட்டடத்தின் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது. அடிப்படை வசதிகள் மற்றும் துய்மைப் பணிகள், மராமத்து பணிகள் அந்தந்த மண்டலத்தின் சுகாதார அலுவா்கள் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் மேற்பாா்வையில் தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு பணிகள் செய்யப்பட்டன.

ற்ஸ்ப்02ள்ஸ்ரீட்ா்ா்ப்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணி.