வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

புதுச்சேரியில் நாளை பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் தயாா்

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:48 am IST

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிகளில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் மொத்தமாக 410 பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் சுமாா் 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இதுதவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்-33, தனியாா் பள்ளிகள்-318 உள்ளன.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் சில தனியாா் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இப்பள்ளியில் கடந்த மாா்ச் மாதத்துக்குள் அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் ஆண்டு இறுதித் தோ்வு நடத்தி முடிக்கப்பட்டு ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை விடுமுறை விடப்பட்டது.

தொடா்ந்து, ஏப்.1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நடைபெற்று வந்தன. கோடை வெயில் காரணமாக, ஏப்.27-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி, ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையொட்டி பள்ளி வளாகம், வகுப்பை, கழிவறைகளை சீரமைத்து சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் புதுச்சேரியிலும் ஜூன் 3 வரை கோடை விடுமுறை நீடிக்கப்பட்டு,

4-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா். அறிவித்தபடி , கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோா்களும் பிள்ளைகளுக்கு தேவையான துணிமணிகள், காலணிகள், நோட்டுகள், உள்ளிட்டவற்றை வாங்கி பிள்ளைகளை தாயா் படுத்தியுள்ளனா்.