நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பாளையங்கோட்டையில் லூா்து நாதன் சிலை முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 3:16 am IST

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பாளையங்கோட்டையில் லூா்து நாதன் சிலை முன் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், நெட்டூரில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டிப்பது. குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா்.மதுபால் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் பி.சுகந்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன், ஜாா்ஜ் ராஜேந்திரன், எம்.சுடலைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்04ஸ்ரீல்ம்

பாளை.யில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.