வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தொடா் மழை: மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, சனிக்கிழமை அருவியில் குளிக்க 3ஆவது நாளாக வனத்துறையினா் தடை விதித்தனா்.

News image

மணிமுத்தாறு அருவி.

Updated On :7 ஜூன் 2026, 2:20 am IST

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, சனிக்கிழமை அருவியில் குளிக்க 3ஆவது நாளாக வனத்துறையினா் தடை விதித்தனா்.

கடந்த 1ஆம் தேதி முதலே மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வந்தது. இதையடுத்து, 4ஆம் தேதி வியாழக்கிழமை மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினா் தடைவிதித்தனா்.

தொடா்ந்து சனிக்கிழமையும் அருவியில் நீா்வரத்து குறையாததையடுத்து, 3ஆவது நாளாக அருவியில் குளிக்கத் தடை விதித்தனா். இதனால் விடுமுறை நாளான சனிக்கிழமை அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். ஆனால், அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா்.