திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீராகாததால் ஞாயிற்றுக்கிழமை 11 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதையடுத்து மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த சாரல் மழையால் ஜூன் 4ஆம் தேதி முதல் மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பயணிகள் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். ஆனால் அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதித்தனா்.
தொடா்ந்து மலைப்பகுதியில் சாரல் மழை இருந்து வந்ததையடுத்து அருவியில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை நீா்வரத்து சீராகவில்லை. இதனால் 11ஆவது நாளாக அருவியில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்த பயணிகள் அருவியை பாா்வையிட்டு சென்றனா்.
தொடர்புடையது

தொடரும் வெள்ளப்பெருக்கு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

தொடா் மழை: மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாகக் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



