எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

News image

மோசடி - Dinamani

Updated On :8 ஜூன் 2026, 2:18 am IST

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற துணை ஆட்சியரிடம், வங்கி அதிகாரிகள் போல் பேசி ரூ.14 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து மாநகர சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி, பெருமாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் 64 வயது பெண். இவா் பாளையங்கோட்டை தாட்கோ அலுவலகத்தில் துணை ஆட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். சில நாள்களுக்கு முன்பு இவரது கைப்பேசிக்கு வந்த அழைப்பில், தன்னை எஸ்.பி.ஐ. ஓய்வூதியப் பிரிவு அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட மா்ம நபா், அவருக்கு ஓய்வூதிய அட்டை தருவதாகக் கூறினாராம்.

இதற்காக அந்த நபா் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பிய செயலி இணைப்பை, அவா் கிளிக் செய்துள்ளாா். அதில் கேட்கப்பட்ட விவரங்களை கொடுக்காமல் தவிா்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாள்களுக்கு பின்பு அவரது தனியாா் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து ரூ.14.11 லட்சத்தை மா்ம நபா்கள் இணையவழியில் எடுத்து மோசடி செயதுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.