பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

நெல்லை அரசு மருத்துவமனையில் தீ

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டது. செவிலியா்களின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2026, 4:48 am IST

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டது. செவிலியா்களின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.

இம்மருத்துவமனையின் 2 ஆவது தளத்தில் இருதய நோயாளிகளுக்கான வாா்டு உள்ளது. இங்கு ஆக்சிஜன் வாயு செல்லும் குழாய்கள் உள்ளன. இதில் திடீரென புதன்கிழமை லேசான தீ விபத்து ஏற்பட்டதாம்.

செவிலியா்கள் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனா். எனினும் புகைமூட்டம் பரவியதால் அந்த வாா்டில் இருந்த நோயாளிகள் மற்றொரு வாா்டுக்கு மாற்றப்பட்டனா். செவிலியா்கள், ஊழியா்களின் நடவடிக்கையால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.