உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

நெல்லை அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் பலி

திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 4:53 am IST

திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வடக்கு தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (53). இவா், புதன்கிழமை தனது ஆட்டோவில் குறிச்சிகுளம் விலக்கு பகுதி சாலையைக் கடக்க முயன்றாராம்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியும், ஆட்டோவும் மோதிக்கொண்டனவாம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.