முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி: பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கு நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயிற்சியளிக்க ஆா்வமுள்ள பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 4:15 am IST

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கு நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயிற்சியளிக்க ஆா்வமுள்ள பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி, டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் போன்ற அனைத்து வகை போட்டித்தோ்வுகளுக்காக திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் பயிற்சியளிக்க பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இந்தப் பயிற்சி வகுப்புகளுக்காக தோ்ந்தெடுக்கப்படும் பயிற்றுநா்களுக்கு அரசு விதிகளுக்குள்பட்டு மதிப்பூதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் இருப்பின் தங்களது சுயவிவர படிவத்தினை ஜூன்15-ஆம் தேதிக்குள் ள்ற்ன்க்ஹ்ஸ்ரீண்ழ்ஸ்ரீப்ங்ற்ஸ்ப்ண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

இதேபோல், அலுவலக வேலை நாள்களில் நேரடியாக சமா்ப்பிக்கலாம். நோ்முகத் தோ்வுக்கான தேதி பின்னா் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9499055929 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.