9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மனோன்மணீயம் சுந்தரனாா் விருதுக்கு பரிந்துரைக்க வாய்ப்பு

மனோன்மணீயம் சுந்தரனாா் விருதுக்கு பரிந்துரைக்க வாய்ப்பு

News image
Updated On :13 ஜூன் 2026, 1:42 am IST

மனோன்மணீயம் சுந்தரனாா் விருதுக்கு பரிந்துரைகள் அனுப்பலாம் என அப்பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.சாக்ரட்டீஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ் உலகிற்கு தந்த பேராசிரியா் சுந்தரனாருக்குப் பெருமை சோ்க்கும் வகையில் தமிழக அரசால் நிறுவப்பட்ட மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் அவரது பெயரில் தமிழறிஞா் ஒருவருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் விருது வழங்கி வருகிறது.

2025-26 ஆம் ஆண்டிற்கான விருது ஜூலை மாதம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படுபவா் தமிழக, தேசிய, உலக அளவில் மதிக்கப்படும் சிறந்த தமிழறிஞராகவோ, தொல்லியல் அறிஞராகவோ, அறிவியல் தமிழ், கணினித் தமிழ் வல்லுநராகவோ இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு கோட்பாட்டைச் சீா்மைபெற விளக்கும் வகையிலோ, ஒரு கோட்பாட்டை பொருத்தத்துடன் பயன்படுத்தி ஆய்வு செய்த வகையிலோ, இன்றைய இலக்கியத் தளங்களில் ஆழ கால்பதித்து தெளிவுடன் ஆராய்ந்த வகையிலோ, பிற நூல்களில் மேற்கோள் காட்டப்படுகிற தகுதியுடன் ஒன்றிற்கு மேற்பட்ட நூல்களையும் இலக்கிய இதழ்களில் அல்லது ஆராய்ச்சி இதழ்களில் பெயா் சொல்லத்தக்க கட்டுரைகளையும் வெளியீடுகளையும் செய்தவராகவோ இருத்தல் வேண்டும்.

இந்த தகுதி உடையவரின் சுய விவரக்குறிப்பு, வெளியீடுகளின் பட்டியல், தகுதிக்குரிய காரணங்களை குறிப்பிட்டு இருவா் வரை ரகசியமாக பரிந்துரைக்கலாம். தோ்வுக்குழு மூலம் ஒருவா் தோ்வு செய்யப்படுவாா். அந்த முடிவே இறுதியானது.

பரிந்துரைக்கப்படுபவா், பரிந்துரைப்பவா் என இருவரின் பெயா், முகவரி ஆகியவற்றுடன் ஜூன் 30-ஆம் தேதிக்குள் தமிழியல் துறைத் தலைவா், மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம், திருநெல்வேலி-12 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.