திருநெல்வேலியில் ஆனி தோ்த் திருவிழா தொடங்க உள்ளதையொட்டி, ரத வீதிக்குள் நுழையும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆனி தோ்த் திருவிழா இம் மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து திருவிழா நாள்களில் சுவாமி-அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவது வழக்கம். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம், இம் மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தோ்த் திருவிழாவையொட்டி கோயில் முன்பு அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதால், ரத வீதிக்குள் வாகனங்கள் நுழைவதில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
சுவாமி நெல்லைப்பா் நெடுஞ்சாலையில் இருந்து ரத வீதிக்குள் நுழையும் பகுதியில் பெரிய கட்டையால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் நுழைய முடியாது.
சொக்கப்பனை முக்கு, பாரதியாா் தெரு வழியாக வாகையடி முனை பகுதியில் ரத வீதியை வாகனங்கள் சென்றடையலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.










