சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தேவா்குளம் அருகே காா்-மொபட் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:06 am IST

தேவா்குளம் அருகே காா்-மொபட் மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியை திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே உள்ள மேசியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராம். இவரது மனைவி சாரதா(50). இவா் வன்னிக்கோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா் திங்கள்கிழமை காலை பள்ளிக்கு செல்வதற்காக வழக்கம் போல் மொபட்டில் புறப்பட்டாா்.

மேசியாபுரம் விலக்குப் பகுதியில் இவா் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.