/
மூலைக்கரைப்பட்டி அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியரை அரிவாளால் வெட்டியவா் கைது செய்யப்பட்டாா்.
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சவளைக்காரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற மின் ஊழியா் செல்வராஜ் (65). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகநயினாா் (55). விவசாயியான இவரது வீட்டிற்கு செல்லும் மின்சார வயா், செல்வராஜ் வீட்டின் நிலத்தின் வழியாக செல்கிாம்.
இதனால், இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் திங்கள்கிழமை காலை செல்வராஜை ஆறுமுகநயினாா் அரிவாளால் வெட்டினாராம்.
இதில் காயமடைந்த செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ஆறுமுகநயினாரை கைது செய்தனா்.






