திருநல்வெலி மாவட்டம், ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மாவட்டம் முழுவதும் 8 வட்டங்களில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ராதாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில், ஆட்சியா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா், 8 பயனாளிகளுக்கு இணையவழிப் பட்டாக்கள், 4 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.
தனித் துணை ஆட்சியா் ஜெயா, ஆட்சியா் அலுவலக மேலாளா் கிருஷ்ணகுமாா், ராதாபுரம் வட்டாட்சியா் வில்லுடையாா், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










