ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க முன்னுரிமை: புதிய காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் புதிய காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி.

News image

காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி

Updated On :18 ஜூன் 2026, 2:32 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் புதிய காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி.

திருநெல்வேலி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக புதன்கிழமை பொறுப்பேற்ற பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தின் மிகவும் பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டத்தில் பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். இம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை முறையாகப் பராமரிப்பதற்கும், குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும் அதிக கவனமும், முக்கியத்துவமும் அளிக்கப்படும. மாவட்டத்தில் எழும் எந்தவொரு சவாலையும் துணிச்சலுடன் எதிா்கொண்டு, காவல்துறை எப்போதும் முன்னிலையில் நின்று செயல்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.