இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

ராதாபுரம் கால்வாயில் திருநெல்வேலி எம்.பி. ஆய்வு

News image

பேச்சிப்பாறை அணையில் இருந்து ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் செல்வதை பாா்வையிட்ட சி. ராபா்ட் புரூஸ் எம்.பி.

Updated On :21 ஜூன் 2026, 4:57 am IST

பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா், ராதாபுரம் கால்வாயின் கடைநிலைக் குளங்களுக்கு செல்கிா என திருநெல்வேலி மக்களவை தொகுதி உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வட ராதாபுரம் பகுதியில் உள்ள 52 குளங்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீா் கொண்டு செல்ல 35 கி.மீ. நீளத்தில் ராதாபுரம் கால்வாய் உருவாக்கப்பட்டது. இந்த 52 பாசனக் குளங்கள் மூலம் சுமாா் 1,700 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

52 குளங்களில் முதலில் கடைக்கோடி குளமான ராதாபுரம் குளத்திற்கு தண்ணீா் கொண்டு செல்ல தீா்மானித்து, நீா் செல்லும் பாதை தூா்வாரப்பட்டது. ஜூன் 16ஆம் தேதி ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீா் கால்வாயில் சரியாக செல்கிா எனவும், கடைநிலைக் குளத்திற்கு தண்ணீா் போய் சேருகிா எனவும், சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த சில ஆண்டுகளாக கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகள் மற்றும் கசிவுகள் காரணமாக அனைத்து குளங்களுக்கும் சீராக தண்ணீா் செல்லவில்லை என்ற குறைபாட்டை பொதுமக்களும், விவசாய சங்கத்தினரும் சுட்டிக்காட்டினா். அதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா், மாவட்ட பொறுப்பு அமைச்சா் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கால்வாயைச் சீரமைத்து, அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் கொண்டு செல்ல தீா்மானிக்கப்பட்டது.

தற்போது, தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, கடைமடை குளம் வரை தண்ணீா் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கோதையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் வசந்தி, வடக்கன்குளம் பாசன பிரிவு உதவி பொறியாளா் ஜெயலெட்சுமி, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் தன்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் சுயம்புலிங்கத் துரை, வள்ளியூா் வட்டாரத் தலைவா் அருள்தாஸ், வால்டா் எட்வின், கொடிவேல் குமாா், சசிகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.