திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட தொழிலாளி, காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்தமடை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (42). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி மூக்கம்மாள். இவா்களுக்கு உச்சிமாகாளி, லெட்சுமி ஆகிய மகள்களும், முருகன் என்ற மகனும் உள்ளனா்.
சீனிவாசனுக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே, வழிப்பாதை தொடா்பான பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப்பிரச்னையில் விரக்தியடைந்த சீனிவாசன் திங்கள்கிழமை காலை உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். காவல் நிலையத்துக்கு அருகிலேயே அவரது வீடு உள்ளதால், உடலில் தீ வைத்தவாறே பத்தமடை காவல் நிலையத்துக்கு வந்துள்ளாா்.
போலீஸாா் அவரை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செவிலியருக்கு பாலியல் தொந்தரவு: வழக்கு தம்மம்பட்டிகாவல் நிலையத்திற்கு மாற்றம்
பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பத்தமடை அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

பத்தமடையில் காரில் ரேஷன் அரிசி கடத்தல்: 4 போ் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



