பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

சூறைக்காற்றில் தூக்கிவீசப்பட்ட ஆட்டோ: ஓட்டுநா் பலத்த காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :23 ஜூன் 2026, 2:06 am IST

கடையம் அருகே கோவிந்தப்பேரியில் திங்கள்கிழமை பிற்பகல் திடீரென வீசிய சூறைக்காற்றில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

கோவிந்தப் பேரியைச்சோ்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் என்ற சுடலை (19). இவா், சொந்தமாக ஆட்டோ ஓட்டிவருகிறாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கோவிந்தப்பேரியிலிருந்து கடையம் சென்று கொண்டிருந்தாா். கோவிந்தப்பேரி இசக்கியம்மன் கோயிலைத் தாண்டிய நிலையில் திடீரென அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றில் சிக்கிய ஆட்டோ தூக்கி வீசப்பட்டது.

சுமாா் நூறு அடி தூரம் உருண்டு சென்று மரத்தில் மோதி நின்றது. இதில், ஆட்டோ ஓட்டி வந்த சுரேஷ் கால் எலும்பு முறிந்தது. அவரை அப்பகுதியினா் மீட்டு ஆவுடையானூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை வீசிய கடும் சூறைக் காற்றில் பல வீடுகள் சேதமடைந்த நிலையில், கோவிந்தப்பேரியில் வீசிய சூறைக்காற்றில் ஆட்டோ தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.