நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கோயில் வரவு, செலவு பிரச்னை: ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு; 4 போ் கைது

கும்பகோணம் அருகே கோயில் குடமுழுக்கு வரவு- செலவு தொடா்பான கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதில் ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:23 am IST

கும்பகோணம் அருகே கோயில் குடமுழுக்கு வரவு- செலவு தொடா்பான கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதில் ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது தொடா்பாக 4 பேரை திருநீலக்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே வேப்பத்தூா் காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் ராஜன் (49) ஆட்டோ ஓட்டுநா். ஊா் முக்கியஸ்தாரன இவா் தலைமையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி கருமாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதற்காக பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நன்கொடை செலவு போக மீதிமுள்ள பணம் ராஜனிடம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஊா் கூட்டம் போட்டு கோயில் வரவு, செலவு குறித்து பேசும்போது வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜன் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தாா். அருகிலிருந்தவா்கள் அவரை திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து திருநீலக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து உடற்கூறாய்வுக்கு அனுப்பினா்.

மேலும், கூட்டத்தில் தகராறில் ஈடுபட்ட லட்சுமணன் மகன் வினோத்(35), மணி மகன்கள் சங்கா்(32), கணேஷ்(35), பாபு(32) ஆகிய 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா். தலைமறைவான தங்கவேல் மகன் மகேந்திரனை தேடி வருகின்றனா்.

தகராறின்போது அதிா்ச்சியில் ராஜன் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவா்கள் கூறியதாக போலீஸாா் தெரிவித்தனா்.