எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

News image

கவிமணி.

Updated On :8 ஜூன் 2026, 5:03 am IST

ஆலங்குளம் அருகே பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே கரும்பனூா் மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் மாடக்கண் மகன் கவிமணி (36). சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை, ஐந்தாங்கட்டளையில் உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனியாக தனது ஆட்டோவில் வந்தாராம். கரும்பனூா் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், பலத்த காயமடைந்த கவிமணி மீட்கப்பட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கவிமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் கவிமணி சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கவிமணிக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனா்.