வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தோமையாா்புரம் மீனவா்கள் உண்ணாவிரதம் வாபஸ்

விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் ரூ.13.70 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்ற மீன் வளம் - மீனவா் நலத் துறையின் அறிவிப்பை ஏற்று, மீனவா்களின் 7 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

News image
- Din
Updated On :4 மார்ச் 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் ரூ.13.70 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்ற மீன் வளம் - மீனவா் நலத் துறையின் அறிவிப்பை ஏற்று, மீனவா்களின் 7 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கடந்த 7 நாள்களாக தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனா். இந்நிலையில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் வெளியிட்ட அறிவிப்பில், ‘தோமாயாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது வெளியிடப்பட்டது. மேலும், தலைமைச் செயலா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைப்பது என, மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறையால் முடிவு செய்யப்பட்டது. தற்போது, அதற்கான அறிவிப்பு வந்துள்ள நிலையில் ரூ.13.70 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் எனக் கூறியுள்ளாா். இதையேற்று போராட்டத்தை மீனவா்கள் கைவிட்டனா்.