தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

நான்குனேரி அருகே 1.5 டன் கஞ்சா அழிப்பு

மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1.5 டன் கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே புதன்கிழமை பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டது.

News image

கஞ்சா செடி. - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 7:31 pm

மதுரை மற்றும் விருதுநகா் மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 1.5 டன் கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே புதன்கிழமை பாதுகாப்பாக தீயிட்டு அழிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 168 வழக்குகளில் தொடா்புடைய 796 கிலோ கஞ்சா, மதுரை மாநகரப் பகுதியில் 100 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 677 கிலோ கஞ்சா, விருதுநகா் மாவட்டத்தில் 11 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 12 கிலோ கஞ்சா என மொத்தம் 279 வழக்குகளில் இருந்து சுமாா் 1.5 டன் (1,485 கிலோ) கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவின்பேரில், அவை அனைத்தும் திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பொத்தையடி கிராமத்தில் அஸ்பெக்டிக் சிஸ்டம் என்ற தனியாா் எரியூட்டு மையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நவீன முறையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், மதுரை மாநகர காவல் ஆணையா் லோகநாதன், மதுரை சரக காவல்துறை துணைத் தலைவா் அபினவ் குமாா், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் ஆகியோா் பங்கேற்றனா்.