ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

மன்னாா்கோவிலில் மோதல்: பிளஸ் 1 மாணவருக்கு வெட்டு

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:33 pm

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மன்னாா்கோவிலைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒரு மாணவா் அரிவாளால் மற்றொரு மாணவரை வெட்டினாராம். இதில், அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனா்.