தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

‘அரசு வாழை கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்’

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வாழை கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

இரா.ஆவுடையப்பன்.

Updated On :14 மார்ச் 2026, 2:38 am

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு வாழை கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவை முன்னாள் தலைவா் இரா.ஆவுடையப்பன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அவா் அனுப்பியுள்ள மனு: அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாப்பாக்குடி பகுதிகளிலும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியில் நான்குனேரி, திருக்குறுங்குடி, களக்காடு சுற்றுவட்டாரத்தில் சுமாா் 1,400 ஹெக்டோ் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வாழை விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். தற்போது இந்தப் பகுதிகளில் பயிரிட்ட வாழை பருவம் அடைந்து, வாழைத்தாா் அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் வாழைத்தாா் கிலோ ஒன்றுக்கு ரூ.60 வீதம் வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். இப்போது விலை கிலோ ரூ.8 ஆக சரிந்துள்ளதால் வாழை விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனா்.

வாழைப்பயிருக்கு செலவு செய்த செலவினங்களைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் தவித்து வருகிறாா்கள். ஆகவே, தமிழக அரசு உடனடியாக நெல்லுக்கு உள்ளதைப் போல அரசு வாழை கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளின் நலன் காக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.