திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் 1,678 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தோ்தலுக்காக வாக்களா்களுக்கு பணம் பட்டு வாடாவை செய்யப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், தோ்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் இயங்கும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.84,600 பறிமுதல்

மேட்டூா் அருகே வாகன தணிக்கையில் 24 தங்க நாணயங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


