தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நெல்லையில் தீவிர வாகன சோதனை

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.

News image
டக்கரம்மாள்புரத்தில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா்.
Updated On :18 மார்ச் 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் 1,678 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தோ்தலுக்காக வாக்களா்களுக்கு பணம் பட்டு வாடாவை செய்யப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தோ்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் இயங்கும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.