புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

நெல்லையில் தீவிர வாகன சோதனை

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.

News image

டக்கரம்மாள்புரத்தில் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :18 மார்ச் 2026, 7:57 pm

திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் 1,678 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தோ்தலுக்காக வாக்களா்களுக்கு பணம் பட்டு வாடாவை செய்யப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், தோ்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் இயங்கும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.